7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் DA, TA, HRA-வில் வரப்போகும் மாற்றம் என்ன?

Mon, 22 Feb 2021-8:07 pm,

ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீட்டை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஊதியச் சட்டம் 2021-ல் அமல்படுத்தப்பட்டவுடன், ஒரு ஊழியரின் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் நிகர சி.டி.சியில் குறைந்தது 50 சதவீதத்துடன் ஒத்திருக்கும்.

புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால், ஒரு நபரின் கொடுப்பனவு நிகர சி.டி.சியில் 50 சதவீதத்தத் தாண்டி செல்ல முடியாது. இதனால் ஊழியர்களின் அகவிலைப்படி (DA), பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவற்றிலும் மாற்றம் இருக்கும்.

ஜீ பிசினஸுடனான உரையாடலில், செபி அங்கீகாரம் பெற்ற வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால் நிகர மாதாந்திர சி.டி.சி-யில் 50 சதவீதம் தான் கொடுப்பனவுகள் இருக்க வேண்டும் என்ற வரம்பு விதிக்கப்படும் என்று கூறினார்.

ஒரு நபரின் மாதாந்திர கொடுப்பனவு அவரது நிகர சி.டி.சி-யில் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற வரம்பு வந்தால் DA, TA, HRA ஆகிய கொடுப்பனவுகளில் மாற்றம் இருக்கும் என்பது தெளிவாகிறது.

 

புதிய ஊதியக் குறியீடு கிராச்சுட்டி மற்றும் வருங்கால வைப்பு நிதியை (PF) மாற்றுமா என்பது குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இது குறித்து பேசிய டிரான்ஸென்ட் கன்சல்டன்ஸின் வெல்த் மேனேஜ்மெண்ட் இயக்குநர் கார்த்திக் ஜாவேரி, மாதாந்திர அடிப்படை ஊதியம் மற்றும் DA அடிப்படையில் பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி கணக்கிடப்படுவதாகவும், இதனால், புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்படுவதால் பி.எஃப் மற்றும் கிராச்சுட்டி ஆகியவை பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link