BSNL ரீசார்ஜ் பிளான்: மலிவு விலை, இலவச கால்கள், வரம்பற்ற தரவு, முழு விவரம் உள்ளே

Mon, 12 Apr 2021-3:52 pm,

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 398 ரூபாய்க்கான இந்த திட்டத்தை BSNL ஜனவரி மாத தொடக்கத்தில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கடைசி தேதி ஏப்ரல் 9 என்று வைக்கப்பட்டது, ஆனால் இப்போது BSNL அதை 90 நாட்கள் நீட்டித்துள்ளது.

 

BSNL தனது சந்தாதாரர்களுக்கு, ரூ .398 சிறப்பு கட்டண வவுச்சரை (STV) அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் நீட்டிப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் ஜூலை 8 வரை இந்த திட்டத்தின் பயன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

டெலிகாம் டாக்கின் அறிக்கையின்படி, BSNL இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. BSNL-லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற தரவு, இலவச குரல் அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் வசதி போன்ற பல நன்மைகளைப் பெறுவார்கள்.

 

ஜனவரியில், இந்தத் திட்டம் சென்னை மற்றும் ஹரியானா வட்டாரங்களுக்காக மட்டும் துவக்கப்பட்டது. ஆனால் இப்போது BSNL-லின் இந்த ரீசார்ஜ் திட்டம் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தில் முன்பு கிடைத்த அதே நன்மைகள் இப்போது, அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  BSNL-லின் ரூ .398 ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 30 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், வேக வரம்பு இல்லாமல், இதில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு கிடைக்கும். BSNL-லின் இந்த திட்டம் ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் கிடைக்கத் துவங்கியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப நாட்களுக்கு, இந்த திட்டம் 90 நாட்களுக்கு இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link