Health News: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளையும் பானங்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

Fri, 08 Jan 2021-9:24 pm,

காய்ச்சாத பால், பனீர் ஆகியவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கும். இந்த பாக்டீரியாக்களின் விளைவுகள் சில சமயம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தாகலாம்.

 

முளைகட்டிய பயறு வகைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை சமைத்தால் மட்டுமே இவை பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

 

காஃபின் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடியை அடைகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் காஃபியை அதிகமாக உட்கொள்வது கருவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் பிறக்கும்போதே குழந்தைகளின் எடை இழப்பு அபாயத்தையும் இது அதிகரிக்கும்.

சமைக்கப்படாத மீன் பல தொற்றுநோய்களை ஏற்படுத்தும். அந்த நோய்த்தொற்றுகளில் சில, கர்ப்பிணிப் பெண்களை மட்டுமே பாதிக்கும். மற்ற நோய்த்தொற்றுகள் உங்கள் குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கும். ஆகையால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

சமைக்காத முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருக்கலாம். இதன் காரணமாக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல் ஏற்படலாம். சில நேரங்களில் இது கருப்பையில் பிடிப்புக்கான அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

பப்பாளியில் லேடெக்ஸ் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது கருவின் வளர்ச்சியை பப்பாளி தடுக்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவதைத் கண்டிப்பாக தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மதுபானம் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் இது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link