Vastu Tips: இந்த 5 செடிகளை தெற்கு திசையில் நடுவதால் தரித்திரம் ஏற்படும்

Tue, 12 Apr 2022-6:00 pm,

துளசி செடியை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். எனினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசியை தெற்கு திசையில் நடக்கூடாது. ஏனெனில் இந்த திசையில் துளசி செடியை நடுவது நிதி நிலைமையை மோசமாக்கும். இது எப்போதும் கிழக்கு, வடக்கு அல்லது கிழக்கு-வடக்கில் நடப்பட வேண்டும்.

வாஸ்து சாஸ்திரப்படி வன்னி செடியை தெற்கு திசையில் நடக்கூடாது. உண்மையில், இந்த திசையில் ஒரு வன்னி மர கன்றை நடவு செய்வது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த செடியை கிழக்கு அல்லது வடகிழக்கில் நட வேண்டும். 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ரோஸ்மேரி செடியை வீட்டில் நடுவது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. இது தவிர, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை நீக்கவும் இந்த செடி உதவுகிறது. எனினும் வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை தெற்கு திசையில் நடக்கூடாது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடு மற்றும் அலுவலகங்களில் மணி பிளாண்ட் வைப்பது மங்களகரமானது. எனுனும், வாஸ்து சாஸ்திரத்தின்படி தெற்கு திசையில் வைக்கக்கூடாது. தென்கிழக்கு திசையில் வைப்பது மங்களகரமானது.

 

வாழை விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்கக்கூடாது. வடகிழக்கில் வைப்பது மிகவும் பொருத்தமானது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link