எல்லாம் ஓகே ஆனால் இதுக்கு மட்டும் நோ - ராகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்

Sat, 08 Jul 2023-1:50 pm,

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கதாநாயகியாய் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், என்ஜிகே, தேவ், ஸ்பைடர், தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தவர்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், காதலில் பொய் இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். 

 

“காதலில், என்னைப் பொறுத்தவரை ஓர் உறவின் ஒப்பந்தத்தை முறிப்பது பொய் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேச முடியாத விஷயம் என்று எதுவும் கிடையாது. காதலுக்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். 

 

காரணம், அந்த உறவில் காதலிக்கும் இருவரும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்போது அவர்கள் இருவரிடையே மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமும் இருக்காது. அப்படியே தவறு செய்தாலும் அதை மறைவின்றி பேசி மனம் விட்டுப் பழகலாம்.

 

தவறு செய்வது இயல்புதானே. நாம் எல்லோரும் மனிதர்கள்கள். ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பெரும் பிரச்னை. காதலில் பொய் பேசுவதையும், எமோஷனலாகப் பேசி ஒருவரை மற்றவர் ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

 

இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற வார்த்தையை பலரும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில நேரம் நீங்கள் நேசிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்காமல், உங்களுக்குப் பிடித்ததை அவர்கள் மீது திணித்து அதைத்தான் நீ செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. 

 

இதனால் அவர்களை வளர விடாமல் தடுக்கிறார்கள். காதலிக்கும் ஒருவரை மென்மேலும் வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்” என்று அவர் காதல் குறித்துப் பேசி இருக்கிறார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link