மீண்டும் முசுடு பிடிக்கும் WhatsApp, தலைகீழாகுமா தனியுரிமைக் கொள்கை?

Tue, 23 Feb 2021-8:24 am,

வாட்ஸ்அப் மீண்டும் புதிய தனியுரிமைக் கொள்கையின் அறிவிப்புகளை பயனர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளதாக, தொழில்நுட்ப தளமான telecomtalk கூறுகிறது.

புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாட்ஸ்அப் பயனர்களிடம் தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தைப் போலவே, இந்த முறையும் பயனர்களுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் விருப்பத் தெரிவு வழங்கப்படவில்லை.

அந்த அறிக்கையின்படி, புதிய விதிமுறைகளை பயனர் ஏற்க வேண்டும் என்று வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால், வாட்ஸ்அப்பில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்ந்து வரும். ஆனால் பயனர்கள் செய்தியைப் படிக்க முடியாது. இது தவிர, செய்திகளை அனுப்பும் விருப்பமும் நிறுத்தப்படலாம்.

இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, வாட்ஸ்அப் (WhatsApp) இதேபோன்ற தனியுரிமைக் கொள்கையை பயனர்களுக்கு அனுப்பியது. இதில், பயனர்களின் உரையாடல்கள், தொடர்பு தகவல்கள், பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) உடன் பகிரப்படும் என்று கூறப்பட்டது.

பிற தளங்களுடன் மக்களின் தரவைப் பகிர்வது பற்றி வாட்ஸ்அப் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பயனர்கள் பிற செயலிகளை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். வாட்ஸ்அப்பின் இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகெங்கிலும் உள்ள பயனர்கள் இப்போது டெலிகிராம் (Telegram)  மற்றும் சிக்னல் (Signal) பயன்படுத்துகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link