சதயத்தில் சனி பகவான்... அக்டோபர் முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் ஆரம்பம்

Sat, 07 Sep 2024-7:09 am,

சனிப்பெயர்ச்சி: இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார் சனி பகவான். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டவர் சனீஸ்வரன். தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான், 2025 அவரை மார்ச் மாதம் வரை கும்பத்தில் நீடிப்பார்.

 

பூரட்டாதியில் சனி பகவான்: சனிபகவான் சமீபத்தில், தனது நட்சத்திரத்தை மாற்றிக்கொண்டு, பூரட்டாதியில் சஞ்சரித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி பூரட்டாதிக்கு சென்று சனி பகவான், 2024 அக்டோபர் மூன்றாம் தேதி வரை இதில் நீடிப்பார்.

சதயத்தில் சனி பகவான்: தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான், 2024 அக்டோபர் மூன்றாம் தேதி சதய நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் மிகவும் பலன் பெறுவார்கள் என்று கணித்துள்ளனர்.

 

மேஷம்: நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவேறும். நிதிநிலைமை வலுவாகும். பணியிடத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். எண்ணிய காரியம் அனைத்தும் கைகூடும்.

சிம்மம்: அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. இதனால் வரை வாட்டி வந்த நிதி நெருக்கடி விலகும். செல்வ வளம் பெருகும். மனதில் திருப்தியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். முதலீடுகள் மூலம் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

 

தனுசு: எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இழுபறி வேலைகள் அனைத்தும் நிறைவடையும். பொருளாதார நிலை மேம்படும். மனதிற்குப் பிடித்த வேலை மாற்றம் இருக்கும். கு

சனி பரிகாரங்கள்: சனி திசை மற்றும் ஏழரை நாட்டு சனி காரணமாக ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட, ஏழை எளியவர்களுக்கு உணவு உடை தானம் செய்வது பலன் கொடுக்கும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி சனி பகவானே வழிபடுவது சிறப்பு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link