செவ்வாய் பெயர்ச்சி... வாழ்க்கையில் உச்சத்தை தொட போகும் 3 ராசிகள்!

Tue, 02 Apr 2024-12:35 pm,

செவ்வாய் கிரகம்: பிற கிரகங்களை போலவே, செவ்வாயின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அனைத்து ராசிக்காரர்களுக்கு அது ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

செவ்வாய் பெயர்ச்சி: வரும் ஜூன் 1 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷத்தில் நுழையப் போகிறது. இதனால், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு செவ்வாய் கிரகத்தின் மூலம் சிறந்த பாக்கியம் இருக்கும். 

அதிர்ஷ்ட ராசிகள்: செவ்வாயின் அருளை பெரும் ராசிக்காரர்கள் செல்வ வளத்தை அபரிமிதமாக பெற்று, இனிமையான வாழ்க்கையினை பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...

மேஷ ராசி:  செவ்வாயின் ராசி மாற்றம் காரணமாக நிதி நன்மைகளைப் பெறலாம். நலன்விரும்பிகளின் ஆதரவால் வருமான ஆதாரங்கள் உருவாகி எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொத்து வாங்குவது தொடர்பான பரிவர்த்தனையையும் செய்யலாம். இந்த நேரத்தில், திருமணமாகாதவர்களுக்கு திருமண திட்டங்கள் வரலாம்.

சிம்ம ராசி: செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும், நீங்கள் திட்டமிட்ட பணிகள் வெற்றி பெறும். சமூக கௌரவம் உயரும். வேலை அல்லது வணிக காரணத்திற்கான பயணம் செய்யலாம். மாணவர்கள் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.

மகர ராசி: செவ்வாயின் ராசி மாற்றம் காரணமாக ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். சமூக கௌரவம் உயரும். ரியல் எஸ்டேட்,  மருத்துவம் மற்றும் உணவு தொடர்பான வேலைகளில் வேலை செய்பவர்கள் சிறப்பு சலுகைகளைப் பெறலாம். இந்த நேரத்தில் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். மேலும், உங்கள் தாயுடனான உங்கள் உறவு வலுவடையும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link