நவம்பர் 4 வரை இந்த ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், வருமானம் கூடும்

Tue, 04 Jul 2023-4:18 pm,

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் நல்ல வெற்றியைப் பெற்று வருவார்கள். நவம்பர் 04 வரை சனியின் அசுப பலன்களால் எந்த வித பிரச்சனையும் இருக்காது. பண ஆதாயத்திற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பல மாதங்களாக வேலை மாற்றம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நல்ல நேரம். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதன் மூலம், உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பீர்கள்.

துலாம்: சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், பலன் தருவதாகவும் அமையப் போகிறது. நவம்பர் 4 ஆம் தேதிக்குள் ஒரே நேரத்தில் பல வகையான நல்ல செய்திகளைப் பெறலாம். ரியல் எஸ்டேட் வாங்கி விற்பதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். சுகபோகங்கள் அதிகரிப்பதைக் காண்பீர்கள். முன்பிருந்ததை விட உங்கள் நிதி நிலை மேம்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

மகரம்: சனியின் வக்ர இயக்கம் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் நிதி நிலையில் நிறைய முன்னேற்றம் ஏற்படும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் செய்பவர்களுக்கு இனி வரும் காலம் பொன்னானதாக இருக்கும்.

சனி பகவான் பொதுவாக மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிக, சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம். ஏழைகளுக்கு உதவினாலும் சனி மகிழ்ச்சி அடைகிறார்.

 

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link