சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் அட்டகாசமான மாற்றம் ஏற்படும்

Sat, 15 Jan 2022-11:00 pm,

மேஷ ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் இனி முடிவுக்கு வரும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித்தரும். 

கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29 வரையிலான காலம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் 2022-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் முன்னேற பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இரண்டுமே பலன் தரும். சாதகமான பண வரவு இருக்கும். பதவி உயர்வு பெற பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அபரிமிதமான அருள் இருக்கும் என்றாலும், மற்ற ராசிக்காரர்களும் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதற்கு சனிக்கிழமைகளில் சில செயல்களை செய்தால் போதும். இந்நாளில் அரச மரத்தின் அடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது, சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்வது ஆகியவை சிறப்பான பலன்களைத் தரும். இது தவிர, ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவான் மிக விரைவாக மகிழ்ச்சி அடைகிறார். இப்படிப்பட்ட உதவிகளை செய்பவர்களுக்கு அவர் உடனடியாக அருள் புரிகிறார்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை ஆகும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link