அதிகமாக டீ குடிப்பவர்களா நீங்கள்? இந்த ஆபத்து எல்லாம் வர வாய்ப்பு இருக்கு!

Sat, 31 Dec 2022-12:46 pm,

தேயிலையில் காஃபின் என்கிற பொருள் உள்ளது, இந்த காஃபினை நீங்கள் அதிகமாக உட்கொள்ளும்போது உங்களுக்கு அதிக பதட்டம் மற்றும் சௌகரியமான உணர்வில்லாமை போன்றவை ஏற்படும்.

 

தேநீரில் உள்ள தியோபிலின் என்கிற பொருள் உங்கள் செரிமான திறனை குறைத்து மலச்சிக்கல் பிரச்சனையை  ஏற்படுத்துகிறது.  அதிகளவில் தேநீர் குடிப்பதால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

 

தேநீரில் உள்ள காஃபின் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.  இதனால் உங்களுக்கு ஞாபக மறதி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 

கர்ப்ப காலத்தில் தேநீர் அருந்தாமல் இருப்பது நல்லது, ஏனெனில் இந்த காலத்தில் அதிகளவில் தேநீர் குடித்தால் கருச்சிதைவு அல்லது குறைவான எடையுடன் குழந்தை பிறப்பது போன்றவை ஏற்படும்..

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link