ஏசியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் இந்த பாதிப்புகள் வரலாம்!

Tue, 28 May 2024-8:07 am,

தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏசி அறையில் இருப்பது வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது. ஆனால் நீண்ட நேரம் ஏசியில் இருப்பது ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். 

 

நீண்ட நேரம் ஏசி பயன்படுத்தப்படும் இடங்களில் குறைந்த ஈரப்பதம் இருக்கும், இது தோல் மற்றும் கண்களில் வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். 

 

ஏசியில் இருந்து வரும் காற்று சிலருக்கு சுவாச மண்டலத்தை எரிச்சலூட்டும். இதனால் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாச தொற்று போன்ற நிலைமைகளை மோசமாக்கும். மேலும் காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது. 

 

நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடல் வெப்பநிலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இது தசைப்பிடிப்பு, மூட்டு விறைப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

 

ஏசியில் இருந்து வரும் கூலிங் காற்றை நீண்ட நேரம் சுவாசித்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்புகள் வரலாம். இதனால் தொற்றுநோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. 

 

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க, நீண்ட நேரம் ஏசியில் இருப்பதை தவிர்க்கவும். அடிக்கடி ஏசி ஏசியை விட்டு வெளியே செல்வது நல்லது.

 

ஏசி அறைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது மந்தமான நிலையை ஏற்படுத்தி, உடலை சோம்பேறி ஆக்குகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link