பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றிய விபரம்..!!

Thu, 02 Dec 2021-4:00 pm,

உலகெங்கிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தான்  பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து பாம்புகளும் ஆபத்தானவை என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் சில பாம்புகள் கடித்தால் காயம் மட்டுமே ஏற்படுகிறது, மரணம் பீதியால் ஏற்படுகிறது. நாட்டில் 13 வகையான விஷப்பாம்புகள் உள்ளன, அவற்றில் 4 மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை - நாக பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன்  ஆகியவை.

பாம்பு கடி சம்பவம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். முதலில், நீங்கள் நகரத்தில் இருந்தால், உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கவும். மறுபுறம், பீதி அடைவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர் அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனில் பீதி உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. அதனால் விஷம் உடலில் வேகமாக பரவுகிறது.

காயத்தை சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் அதை தண்ணீரை அதன் மீது  கொட்டக் கூடாது. காயத்தை உலர்ந்த பருத்தியால் மூட வேண்டும். காயம் காரணமாக வீக்கம் ஏற்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரின் அணிந்துள்ள  நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அகற்ற வேண்டும்.

காயத்தின் மீது ஐஸ் வைக்கக்கூடாது. காயத்தை துடைக்கவோ அல்லது வாயின் மூலம் விஷத்தை எடுக்கவோ கூடாது. மருத்துவர் அல்லது நிபுணரின் அறிவுறுத்தல்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டவருக்கு மருந்துகளை வழங்கக்கூடாது.

பாம்பு கடித்த பிறகு காஃபின் அல்லது ஆல்கஹால் உட்கொள்ளக்கூடாது. இதனால் உங்கள் உடலில் விஷம் வேகமாக பரவும்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து WHO கவலை தெரிவித்து வருகிறது. 2030  ஆண்டு வாக்கில், இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், 2001 முதல் 2014 வரையிலான தரவுகளின் ஆய்வின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட 6,11,483 வழக்குகளில் 2833 பேர் இறந்துள்ளனர்.

2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பதிவுசெய்யப்பட்ட பாம்பு கடி வழக்குகள் அனைத்தையும் ஆய்வு செய்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளில் இறப்பு விகிதம் வேகமாக அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பாம்புக்கடியை தடுக்க முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாத நிலை இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. விஷம் மற்றும் விஷமற்ற பாம்புகளுக்கு இடையேயான வித்தியாசம், பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும், இந்த விஷயங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியவில்லை. 

அரசு சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவமனைகளில் பாம்புக்கடி சம்பவங்களின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்துவது பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற சிறந்த வழியாகும். மருத்துவப் பட்டதாரி மாணவர்கள் தங்கள் இன்டர்ன்ஷிப்பின் போது பாம்புக்கடி தொடர்பான சில குறுகிய காலப் படிப்புகளை கட்டாயம் படிக்க வேண்டும், இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link