வலிகளை போக்க உதவும் மாம்பூக்கள்! மாமரத்து பூ எடுத்து மஞ்சம் போடலாமா? வலி நிவாரணியாகும் மாம்பூ!

Fri, 22 Mar 2024-4:01 pm,

மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்து அழகை அள்ளித் தரும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம். இது பல வலிகளை போக்கும் வலிநிவாரணியாக செயல்படுகிறது

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிட முடியாமல் அவதிப்படும்போது, மாம்பூக்களை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து  கொதிக்க வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த சாறை வடிகட்டியபின், எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து, தொண்டைக்குள் இறங்குமாறு தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்தால் தொண்டை வலி குணமாகும்

மாம்பூ, நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் மாம்பூவை பயன்படுத்தினால், சர்க்கரை நோய் கட்டுப்படும். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவில் எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு வெந்நீரில் கலந்து பருகவும்.  தினசரி காலையில் வெறும் வயிற்றில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,  நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்

மாம்பூக்களை நன்றாக உலர வைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு வேண்டும்போது பயன்படுத்தலாம். இந்தப் பொடியை மோரில் கலந்து பருகினால் வாய்ப்புண், வயிற்றுப்புண் என உடலின் உள் பகுதிகளில் ஏற்படும் புண்கள் ஆறிவிடும்.  

மாம்பூக்களை சிறிதளவு வாயில் போட்டு மென்று வந்தால் பல்வலி குணமடையும். பற்கள் மற்றும் ஈறுகள் பலமடையச் செய்யும் தன்மையை மாம்பூ கொண்டுள்ளது. மாம்பூ மற்றும் மாந்தளிரை நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலிசரியாகிவிடும்.  

தலைவலி, தலைபாரம் ஜலதோஷம் இருந்தால், மாம்பூவைச் தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் இந்த பிரச்சனைகள் நீங்கிவிடும்  

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் என மூன்றையும் சம அளவு சேர்த்து நீர் விட்டு மைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபோதி நீங்கிவிடும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link