தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா

Wed, 27 Jan 2021-11:34 pm,

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்க ரதத்தில் முருகனை கண்ட பக்தர்களின் அரஹர கோஷம் பழநி மலையில் எதிரொலித்தது. முருகா. முருகா என பக்தர்கள் உருக, சாந்த சொரூபியாய் முருகக் கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளன

தருகாசுரனை முருகன் வதம் செய்த நாள் தை பூசம். நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.

காவடிகளில் பல விதங்கள் உண்டு. பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி என பல பொருட்களை காவடியில் சுமந்து சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன

தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

 

முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. 

தைப்பூச திருவிழாவை நாளை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் விரதமிருந்து மாலையணிந்து பாதயாத்திரையாக வந்து தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

தைப்பூசத்திற்கான சிறப்பு தேரோட்டம் ஜனவரி 28ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link