திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் - இனி தகராறு வராது!

Thu, 05 Sep 2024-9:42 pm,

திருமண உறவில் பிரச்னைகள் அனைத்து தம்பதிகளுக்கும் இருக்கும். நமக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்ன யாரும் தங்களை தாங்களே வருத்திக்கொள்ளக் கூடாது. 

 

அப்படி திருமண உறவில் தொடர்ந்து தகராறு வரும்பட்சத்தில், பிரச்னையை தீர்க்க இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். அவை குறித்து இங்கு விரைவாக காணலாம். 

 

முதலில் என்னதான் பிரச்னை என்பதை தம்பதியர் இருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். உறவில் தங்களுக்குள் எது பிரச்னையாக இருக்கிறது என்பதை இருவரும் கண்டுபிடிப்பதே, அதை தீர்ப்பதற்கான முதல் படியாகும். 

 

அதன்பின், அந்த பிரச்னை குறித்து நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். தீவிரமாக அந்த பிரச்னையை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படை வேர் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். 

 

அதேபோல், அந்த சண்டைக்கும், பிரச்னைக்கும் நீங்கள் தனியே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் உங்களின் பார்ட்னரோடு நடந்துகொள்ளும் முறை, பேசும் தொனி உள்ளிட்டவற்றில் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

 

இந்த பிரச்னை அல்லது சண்டையின் விளைவு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அதுசார்ந்த  உங்களுடைய பார்வையை சற்று மாற்ற வேண்டும். இது உங்களுக்கு மேலும் தெளிவை தரும்.

 

அந்த சண்டையின் மூலம் உங்களுக்குத் தேவையானவை, எதில் சமரசம் செய்ய தயாராக இருக்கிறோம் என்பது குறித்து ஆரோக்கியமான, வெளிப்படையான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

 

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. திருமண உறவில் பிரச்னை வந்தால் நீங்கள் உரிய வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link