வீட்டில் வைக்கக்கூடாத செடிகள்: வாஸ்து சொல்லும் இதை வீட்ல வைச்சா, நிலைமை மோசமாயிடும்

Tue, 01 Aug 2023-8:26 pm,

வீட்டில் வைக்கப்படும் பொருட்களால், வீட்டில் எது போன்ற மாறுதல்கள் நடக்கும் என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய விஷயங்களைப் புறக்கணிப்பது ஒருவருக்கு நேரடி விளைவைக் கொடுக்கும். சில செடிகளை வீட்டில் வளர்த்தால், அது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும்.  

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கள்ளிச்செடி, வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். இலைகளில் உள்ள முட்கள் மற்றும் கூர்மையான முட்கள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, இது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும், குடும்பத்தில் பதற்றம் மற்றும் கவலையையும் தருகிறது.

குளிர்காலத்தில் வைக்கப்படும் பருத்தி செடிகள் மிகவும் அழகாக இருக்கும், ஆனால் அதை வீட்டில் வைத்திருப்பது அதிர்ச்தத்திற்கு விடை கொடுத்து அனுப்புவதாக கருதப்படுகிறது. வாஸ்துவின் படி பருத்தி செடிகளை வீட்டிற்குள் வைத்திருப்பது கெட்ட செய்திகளை கொண்டு வரும்.  

போன்சாய் செடிகளை வீட்டில் வைக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கவில்லை. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தாலும், வீட்டில் வைக்கக் கூடாது. இது உங்கள் வாழ்க்கை சுழற்சியை சீர்குலைக்கிறது, தாவரத்தின் வளர்ச்சியைத் தடுத்து வைக்கப்படும் இந்த செடி, உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தை தடுத்துவிடும்.

புளியமரம் அசுபமாக கருதப்படுகிறது, அவை தீய சக்திகளின் இருப்பிடமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. வாஸ்து வல்லுநர்கள் புளிய மரத்திற்கு அருகில் வீடு வாங்குவதையோ அல்லது கட்டுவதையோ ஊக்குவிப்பதில்லை. புளியமரம் வீட்டிற்கு அருகில் இருந்தால், வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

அரச மரம் கோவில்களில் அதிகம் காணப்படுகின்றன, ஆனால் அதை உங்கள் வீட்டில் நடக்கூடாது. உங்கள் வீட்டில் அரச மரம் வளர்ந்தால், அதைப் பிடுங்கி நட வேண்டும். ஏனெனில் அரச மரத்தை வீட்டில் இருந்தால் பண இழப்பு ஏற்படும்

பனை மரத்தை வீட்டில் வைக்கக்கூடாது, அது எல்லாவிதத்திலும் கெடுதலைத் தரும் என வாஸ்து கூறுகிறது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link