சனி அஸ்தமனம், மார்ச் 5 வரை இந்த 5 ராசிகளுக்கு கவனம் தேவை

Tue, 07 Feb 2023-9:03 am,

சனி அஸ்தமனம் 2023: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. அதன்படி கடந்த 30 ஆம் தேதி சனி கும்ப ராசியில் அஸ்தமனமானார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு கவனம் தேவை. எனவே மார்ச் 5 வரை எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

 

கடக ராசி: மனம் அமைதியின்றி இருக்கும். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உரையாடலில் நிதானமாக தேவை. வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். சிரமங்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பைக் காணலாம். கடின உழைப்பு அதிகமாக இருக்கும்.

 

விருச்சிக ராசி: மனம் கலங்கிவிடும். உத்தியோகத்தில் சிரமங்கள் வரலாம். பணியிடத்தில் அதிக உழைப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உரையாடலில் சமநிலையை பராமரிக்கவும்.

 

மகர ராசி: மனம் அமைதியின்றி இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். இனிப்பு உணவில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சிரமங்கள் வரலாம். கல்விப் பணிகளில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.

 

கும்ப ராசி: மனதில் குழப்பம் இருக்கும். மனதில் எதிர்மறையான எண்ண ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் அதிக உழைப்பு இருக்கும். நண்பருடன் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையை தவிர்க்கவும்.

 

மீன ராசி: மனதில் குழப்பம் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். மன அமைதிக்கு முயற்சி செய்யுங்கள். பேச்சில் கடுமையின் தாக்கம் அதிகரிக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும், ஆனால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link