Dussehra Fire 2022: ராவணனை எரித்த விஜயதசமி கொண்டாட்டங்கள்

Thu, 06 Oct 2022-10:06 am,

அக்டோபர் 5ம் தேதியான நேற்று, நாடு முழுவதும் ராவணனின் பல உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு தசரா கொண்டாடப்பட்டது. துர்கா பூஜை திருவிழாவின் நிறைவு நாள் தசமி கொண்டாட்டங்கள்  

(புகைப்படம்:PTI)

தசரா அன்று, பெரிய கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ராவணன் தகனத்தைக் காண மக்கள் பெருமளவில் கூடினார்கள்

(புகைப்படம்: ANI)

ஒன்பது நாட்கள் நீடித்த நவராத்திரி திருவிழா, விஜயதசமி அன்று முடிவடைந்தது. லே, லூதியானா, டேராடூன், பாட்னா மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரித்து தசரா பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.

(புகைப்படம்: ANI)

தசரா சாரதா நவராத்திரியின் பத்தாவது நாளில் வருகிறது

(புகைப்படம்:PTI)

டெல்லியில் தசரா டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்த தசரா கொண்டாட்டத்தில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருடன் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியரசுத் துணைத் தலைவருக்கு ராம்லீலா அமைப்பாளர்களால் சூலாயுதம் வழங்கப்பட்டது. அமைதியின் சின்னமான வெள்ளைப் புறாக்களையும் அவர் விடுவித்தார். அதன்பிறகு, அவர் ராவண தகனைக் குறிக்கும் வகையில் அடையாளமாக அம்பு எய்தினார்.

(புகைப்படம்: ANI)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link