ருவாண்டா பெண்ணின் பரிதாப நிலை; ‘வேற்றுகிரக’ குழந்தையை பெற்றெடுத்த சோகம்..!!!

Sun, 29 Aug 2021-1:38 pm,

டெய்லி ஸ்டாரில் வெளியிடப்பட்ட செய்தியின் படி, குழந்தையின் தந்தை அவர் பிறந்தவுடன் அவரை ஏற்க மறுத்து, குழந்தையைக் கொல்ல வேண்டும் என மனைவிக்கு கட்டளையிட்டார். ஆனால் ருவாண்டாவைச் சேர்ந்த பஜெனெசா லிபர்ட்டா இதற்கு உடன்படவில்லை, அதன் பிறகு அந்தப் பெண் கணவர் மற்றும் குடும்பத்தினரால் தனியாக விடப்பட்டார். குடும்பத்துடன் வாழ விரும்பினால், குழந்தையை கொன்று விட வேண்டும் என்று பெண்ணின் கணவர் கூறியுள்ளார். (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

குழந்தையின் தாய் பஜெனேஜா தனது சோகக் கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். தான் வருத்தமாக இருப்பதாக கூறினார். இதன் காரணமாக குழந்தையை தனியாக பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

பஜினேஜாவை அவரது மாமனார் மற்றும் கணவர் தனியாக விட்டுவிட்டனர். இதன் காரணமாக, அந்தப் பெண் தனது குழந்தையை வளர்ப்பதில் மிகவும் சிரமப்படுகிறார். எல்லோரும் குழந்தையை வேற்றுகிரகவாசி என்று அழைக்கிறார்கள்.  (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

குழந்தையைப் பார்த்து, எல்லோரும் அவரை கேலி செய்கிறார்கள். அவரது கிராம மக்கள் குழந்தையையும் அவரது தாயையும் புறக்கணித்தனர். குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு நிலை இருக்கிறது என்று டாக்டர்களால் கூட விவரிக்க முடியவில்லை. பஜெனேஜா தனது மகனுக்கு மிகவும் வலி இருப்பதாக கூறினார். இப்போது அவள் தன் மகனின் சிகிச்சைக்காக ஆன்லைனில் மக்களிடம் உதவி கேட்கிறார். இதற்காக, அவர் ஒரு ஆன்லைன் கணக்கையும் தொடங்கியுள்ளார். (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link