கார் மற்றும் பைக்கை தண்ணீர் கொண்டு கழுவினால் ரூ. 5000 அபராதம்!

Fri, 08 Mar 2024-5:22 pm,

கர்நாடகா மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகர் முழுவதும் தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் நீரை சேமிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.  வாகனங்களை கழுவுவதில் அதிகளவு தண்ணீர் வீணாவதால், தண்ணீர் கொண்டு கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

மேலேயும் பல விஷயங்களுக்கு தண்ணீரை பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.  வாகனங்களை கழுவுவதற்கும், நீரூற்றுகள் மற்றும் தோட்டக்கலைக்கும் தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இவற்றை மீறினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த உத்தரவில், கட்டுமானப் பணிகள், செயற்கை நீரூற்றுகள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பிற துப்புரவு பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

BWSSB தலைவர் டாக்டர் ராம் வசந்த் மனோகர் கூறுகையில், " நகரில் வெப்பம் அதிகரித்து வருவதாலும், மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மக்கள் தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறி உள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link