தினமும் கிராம்பு டீ குடிங்க... இதுல இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்

Tue, 12 Dec 2023-4:33 pm,

பலர் நோய்வாய்ப்படும்போது அல்லது தொண்டை புண் இருக்கும்போது கிராம்பு டீயைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். இது நமக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது.

கிராம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது. பொதுவாக ஜலதோஷம் முதல் சளி வரை பல சிக்கல்களில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. 

செரிமானம், வாயு, மலச்சிக்கல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம்பு மிகவும் நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீரில் சில துளி கிராம்பு எண்ணெயைக் கலந்து குடிப்பது நல்லது. தினமும் ஒரு கப் கிராம்பு நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

கிராம்பில் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் ஓய்வெடுக்க உதவும் பண்புகள் உள்ளன என்பது மிகச் சிலருக்குத் தெரியும். ஆகையால் மன அழுத்தம் (Mental Tension) உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நன்மை பயக்கும். 

கிராம்பு (Clove) டீ வயிற்றுப் புண்கள், அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, வயிற்றுப் புறணியைப் பாதுகாக்கிறது. மேலும் இது செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. 

கிராம்பில் இயற்கையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் சின்தசிஸ் பிளாக்கர்கள் நிறைந்துள்ளன. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க (Weight Loss) உதவுகிறது.

கிராம்பு புற்றுநோய் செல்களைக் கொல்லும் என்று நம்பப்படுகிறது. கிராம்பில் யூஜெனோல் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

 

கிராம்பு உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் யூகலிப்டஸையும் கொண்டுள்ளது. இது உடல் பாகத்தின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது கல்லீரல் செல்கள் பரவுவதையும் தடுக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link