உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்?

Wed, 20 Mar 2024-2:37 pm,

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி உள்ள நிலையில் பலரும் தங்களது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கின்றனர். ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

சேமிப்புக் கணக்குகளில் அதிகபட்ச பண வரம்பை மீறி பரிவர்த்தனை செய்தால் வருமான வரி நோடீஸை பெற வேண்டி இருக்கும். அதற்கு உரிய பதில் அளிக்காத பட்சத்தில் நீங்கள் வரி கட்ட வேண்டி வரும். 

 

வருமான வரித்துறையின்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் ரொக்கமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.  ஒரு நிதியாண்டில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், அந்த நபரின் அனைத்து கணக்குகளையும் கணக்கில் கொண்டு கணக்கிடப்படுகிறது. 

 

வருமான வரிச் சட்டம் 1962 இன் பிரிவு 114B இன் படி, அனைத்து வங்கிகளும் அல்லது நிதி நிறுவனங்களும் அதிக அளவில் ரொக்கமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டால் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். 

 

விதிகளின்படி, உங்கள் சேமிப்புக் கணக்கில் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வைத்திருந்தால், அதற்கு வருமான வரி விதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் இருந்தால், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link