இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?

Fri, 20 Sep 2024-3:30 pm,

எடை அதிகரிப்பு:

இரவில் அதிக நேரம் விழித்துக்கொண்டு இருப்பதால் பசியுணர்வு அதிகமாகலாம். இதனால், எடை கூடி போகலாம்.

சரும ஆரோக்கியம்:

சரியாக தூங்காமல் இருப்பது, சரும ஆரோக்கியத்தை கெடுக்கலாம். கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ளிட்ட சில பாதிப்புகளை அவை கொண்டு வரலாம்.

மனநிலை மாற்றங்கள்:

சரியாக தூங்காதது பதற்றம், மன அழுத்தம் போன்ற மனநிலை மாற்ற பிரச்சனைகளை உருவாக்க இயலும்.

தனிமை:

இரவில் வெகு நேரம் விழித்துக்கொண்டிருப்பதால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் உங்களால் இருக்க முடியாத நிலை ஏற்படலாம். இதனால் தனிமை உணர்வு மேலோங்கலாம். 

நோயெதிர்ப்பு சக்தி:

தூக்கம் சரியாக இல்லாததால், உங்களின் நோயெதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புள்ளதாம். 

சோர்வு:

இரவில் தாமதமாக உறங்குவதால், உங்களின் சர்காடியன் ரிதம் சரியாக இயங்காமல் போகலாம். இதனால் எப்போதும் சோர்வான மனநிலையே இருக்கும்.

கவனச்சிதறல்:

தூக்கமின்மை பிரச்சனை, கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். முடிவெடுத்தல் திறன், நினைவாற்றல் ஆகியவை மங்கி போகலாம். 

உடல் நிலையில் முன்னேற்றமின்மை:

தூக்கமின்மை, நாள்பட்ட நோய் பாதிப்பிற்கு வழிவகுக்கலாம். இருதய நோய் தொடர்பான பிரச்சனைகள் உள்பட சில நோய் பாதிப்புகள் இதில் அடங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link