குழந்தைகளை ஏன் தனியறையில் தூங்க வைக்க வேண்டும்.!

Thu, 26 May 2022-5:33 pm,

சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்க வைக்க பக்குவப் படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.

குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விடும் பழக்கத்தை மாற்றி, தட்டில் போட்டு தனியாக உண்ண பழக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் தன் வேலையை தானே செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு தோன்றும். 

இரவில் தனியறையில் தூங்க பயப்படும் குழந்தைகளை, பெற்றோர் தங்கள் அறையிலேயே தனி கட்டிலில் தூங்க வைத்து பழக்கப்படுத்த வேண்டும். 

 

தாயின் தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ இல்லாமல் உறங்கி பழகும் குழந்தை தனக்கு அடுத்தபடியாக பிறக்கும் குழந்தையை எதிரியாக பார்க்கும் நிலை இருக்காது.

 

பெற்றோர் குழந்தைகளிடம் இல்லை, முடியாது, கிடைக்காது என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் பிடிவாதம் குறைந்து வாழ்கையின் எதார்த்த நிலை தெரிந்து குழந்தை வளர அது உதவியாக இருக்கும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link