Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான தீர்வு சொல்லும் ‘மஞ்சள்’ பழங்கள்! நீரிழிவைக் கட்டுப்படுத்த சுலப வழி!

Mon, 05 Feb 2024-8:33 am,

மருந்துகள் மட்டுமின்றி, சில பழங்களை உட்கொள்வதும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சில பழங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, மஞ்சள் நிறத்தில் உள்ள இந்தப் பழங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்

நாள்பட்ட நோயான நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தாலே உணவில் மாற்றங்கள் செய்ய வேண்டும். இது ஒரு மரபணு நோய் மட்டுமல்ல, தினசரி வாழ்க்கையை பாதிக்கும் ஒரு வாழ்க்கை முறை நோய் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.  

 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை இல்லை, ஆனால் அதன் அறிகுறிகளை கிடைக்கக்கூடிய மருந்துகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், உணவு பழக்கங்களை சீர்படுத்தி, பழங்களை அதிகமாக உண்டு வந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்

சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் போன்ற பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்கள் கிடைக்கின்றன. சிவப்பு ஆப்பிளை மட்டுமே பொதுவாக பார்க்க முடியும், மஞ்சள் ஆப்பிளைப் பற்றி மிகவும் சிலருக்குத் தான் தெரியும். மஞ்சள் நிற ஆப்பிள் பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மஞ்சள் ஆப்பிளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம், இது ரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைத்திருக்கும்

சூப்பர்ஃப்ரூட்களில் முதலிடத்தை பிடிக்கும் எலுமிச்சைக்கு சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் பண்புகளும் அதிக அளவில் உண்டு. வைட்டமின்கள் நிறைந்த எலுமிச்சம்பழம், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சையை எந்த வழியில் உட்கொண்டாலும் நன்மை தான். இது, நீரிழிவு நோயாளிகளுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் சிறப்பு சத்துக்கள் கொண்ட இந்த பேஷன் பழம், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும், இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் மஞ்சள் பழங்களின் வரிசையில் இந்தப் பழத்திற்கு முக்கிய இடம் உண்டு

ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும், பப்பாளியின் நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு . பப்பாளி சிவப்பு நிறமாக இருந்தால், அது நன்கு பழுத்திருப்பதால், அதன் சுவையில் இனிப்பு அதிகரிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள், மஞ்சள் நிற பப்பாளியை உண்பது பலனளிக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட இலந்தைப் பழம், சிறுநீர் அடிக்கடி கழிக்க ஏற்படும் உணர்வையும் கட்டுப்படுத்தும். புளிப்பும் துவர்ப்பும் கொண்ட இந்தப் பழம், பசி எடுக்கும்போது சாப்பிட உகந்த, சத்தான பழம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இலந்தையை அடிக்கடி சாப்பிடலாம், செரிமானக் கோளாறுகளும் சரியாகும்

பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link