புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஒட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி கணேஷ் - அழகு. இதில், இருவரும் கணவன் மனைவியை பிரிந்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கணேஷ் பெயிண்டராகவும், அழகு மீனா இதே ஊரில் உள்ள ஒரு அழுகு நிலையத்திலும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று அழகு நிலையத்திற்கு சென்ற கணேஷ், மீனா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொளுத்தி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை



மீனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் கணேஷ் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனையடுத்து உடலில் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட மீனாவை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


மேலும் படிக்க | கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை


தப்பித்து ஓடிய கணேஷனை பிடித்து எதற்காக மனைவியை தீயிட்டு கொளுத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அழகு மீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவனே மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பாண்டிச்சேரி முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR