தெலுங்கானா: 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 50 வயது நபரை ஊர் பொதுமக்கள் அடித்து கொன்றுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவின் நன்டிப்பெட் பகுதியின் டொனக்கேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் மெட்ஷி சன்னா(50). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சனிகிழமை அன்று 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.


இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள், அவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். இதனால் பலத்த காயங்களுடன் அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருந்துவமனையில் அனுமதித்தனர். 



எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிர் இழந்தார். மெட்ஷி சன்னா மூன்று முறை விவாகரத்து ஆனவர் எனவும், தற்போது அந்த கிராமத்தில் தனியாக தான் வாழ்ந்து வந்தார் எனவும் தெரிகிறது.


இந்த சம்பவத்தை காட்டிலும் பல சட்ட அத்துமீறல்கள் அப்பகுதியில் நடந்து வருவதாகவும். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.