இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பெளலிங் தேர்வு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 39-வது லீக் ஆட்டம் இன்று (மே 07) இரவு 8 மணியளவில் நடைபெறும் போட்டியில் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.


ஹைதராபாத் அணி இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றியையும், 2 தோல்வியையும் பெற்றுள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அந்த அணி இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு தன் ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.


பெங்களூர் அணி இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்றுள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் பெங்களூர் அணி உள்ளது. எனவே இன்று நடைபெறும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்காக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் தனது முழுமுயற்சியையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!