சேலம் மாணவர் ஒருவர் திரைப்பட பாணியில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் தமிழ் சங்க சாலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ் என்பவரது மகன் கெவின்ஹரி. பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற இவர் நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார்.


இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவர் கெவின்ஹரி, திரைப்பட பாணியில் முகத்தில் பாலித்தீன் கவரைக் கட்டி தற்கொலை செய்துகொண்டார். 


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து பலியான மாணவரின் உடலை மீட்டெடுத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மாணவரின் மரணம் தற்கொலை தானா? என்பது குறித்தும் தற்கொலையெனில் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை கண்டறியும் விதத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.