நியூயார்க்: Venus எனப்படும் வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் புதிய கண்டிருக்கிறார்கள். வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு இருப்பதால் அங்கு உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்த விஷயத்தில் மேலதிக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வீனஸில் 96 சதவீத கரியமில வாயு (carbon dioxide) உள்ளது, ஆனால் அங்கு பாஸ்பைன் வாயு இருப்பது அசாதாரணமான ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிக்கையின்படி, வெள்ளியின் வளிமண்டலத்தில்   பாஸ்பைன் வாயு இருப்பது ஹவாய் மற்றும் அமெரிக்காவின் சிலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாக்டீரியா வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனை அதன் இருப்பு இல்லாமல் வெளியேற்றும் போது பாஸ்பைன் வாயு பூமியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்டீரியாக்கள் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்க்து. ஆனால் பாஸ்பைன் வாயு இருப்பதை வைத்து மட்டுமே இருப்பது வெள்ளி கிரகத்தில் 100% உயிர் வாழ்வதற்கான ஆதாரம் இருப்பதாக கூறிவிட முடியாது என்று கூறுகிறார்கள்.


சுக்கிரன் கிரகம் மிகவும் வித்தியாசமானது
கிறித்துவ மதத்தினரின் புனித புத்தகமான பைபிளில் வெள்ளி அதாவது சுக்கிரன் கிரகம், நரகம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் 96% கார்பன் டை ஆக்சைடு உள்ளது. சுக்கிரனின் வெப்பநிலை 400 ° C க்கும் அதிகமாக உள்ளது, அதாவது அடுப்பில் பீஸா சமைக்கும் வெப்பநிலை. அதனால்தான் வெள்ளி கிரகத்தில் கால் வைத்தால், சில நொடிகளில் நாம் கொதிக்க ஆரம்பித்துவிடுவோம். இந்த சூழ்நிலையில், அங்கு உயிர் இருந்தாலும், அதற்கு மேலே 50 கிலோமீட்டர் தூரத்தில் தான் உயிரினங்கள் இருக்கமுடியும் என்றும் கூறப்படுகிறது.  


நேச்சர் அஸ்ட்ரானமி (Nature Astranomy) என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான அறிக்கையின்படி, 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவும் சுக்கிரன் கிரகத்தில் உயிருக்கு ஆபத்தான விஷ வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ளன, அங்கு சூடான எரிமலை ஆறுகள் பாய்கின்றன. அதே வெள்ளிக் கோளைப் பற்றிய நற்செய்தியையும் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர். சூரிய குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் குழுவின் ஆராய்ச்சி அறிவியல் இதழ் Nature Astronomy இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


பூமியைத் தவிர வேறு ஒரு கிரகத்தில் உயிர் இருப்பதற்கும், மற்ற கிரகங்களில் வாழ்க்கை ஆராயப்படுவதற்கும் மிக அற்புதமான அறிகுறி என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஆலன் டஃபி கூறுகிறார்.


எனவே இந்த வாயு வெள்ளி கிரகத்தில் இருப்பதற்கான காரணம் என்ன? அது ஏன் அந்த கிரகத்தின் 50 கிலோமீட்டர் மேற்பரப்பு உயரத்தில் உள்ளது? என்பது போன்ற பல கேள்விகள் விஞ்ஞானிகளுக்கு எழுந்துள்ளன. இவற்றுக்கான பதில்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவியலும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவும் சுக்ரயன் 1 ஐ அனுப்ப தயாராகி வருகிறது, இதனால் வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த முக்கியமான தகவல்களை அங்கு சேகரிக்க முடியும்.


Also Read | இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் அதிசயம்! காரணம் தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR