வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராமப்புரங்களில் சில மிருகங்கள் திடீரென கோவம் கொண்டு வெகுண்டெழுவதையும் மூர்க்கத்தின் உச்சிக்கு செல்வதையும் நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இவற்றின் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இதன் உச்சகட்டமாக சில சமயங்களில் விலங்குகள் மனிதர்களைத் தாக்கி காயப்படுத்துகின்றன. அவர்களின் அதிர்ஷ்டம் நன்றாக இருந்தால், மனிதர்களின் இந்த கொடூர தாக்குதல்களிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். 


தற்போது அது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காளை ஒன்று திடீரென சீறிப் பாய்ந்து மூர்க்கமான வடிவில் தோன்றுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. அந்த காளையை கட்ட வந்த நபர் அதன் நிலையை பார்த்து அஞ்சி அங்கிருக்கும் கம்பத்தில் ஏறிக்கொள்கிறார். அங்கிருந்த மற்ற சிலர் அங்கும் இங்கும் ஓட ஆரம்பிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, காளை ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. இல்லையெனில் அதற்கு வந்த கோவத்திற்கு அது  நிச்சயமாக யாரையாவது காயப்படுத்தியிருக்கும்.


திடீரென்று காளைக்கு வந்த கோபம் 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் வரும் காட்சிகளை பார்த்தால் அது ஒரு கிராமப்புறம் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.  சாலையில் ஒரு பயங்கரமான காளை இருப்பது தெரிகிறது. அங்கு வேறு சிலர் இருப்பதையும் காண முடிகின்றது. திடீரென்று காளைக்கு பயங்கர கோவம் வந்தது. சின மிகுதியால் அது அங்கிருந்த ஒருவரை காயப்படுத்த ஓட முயற்சிக்கிறது. 


காளையின் ஆபத்தான வடிவத்தைப் பார்த்து, அந்த நபர் விரைவாக மரத்தில் ஏறுகிறார். காளை அமைதியடையும் வரை காத்திருக்கத் தொடங்குகிறார். ஆனால் காளையும் ஏதோ யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறது. அது தொடர்ந்து மேலே ஏறிய நபரை பார்த்துக்கொண்டே இருக்கிறது. சிறிது நேரம் கழித்து காளை அங்கிருந்து ஓட முயல்கிறது. ஆனால் தான் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பது பின்னர்தான் அதற்கு தெரிகிறது. 


மேலும் படிக்க | தவறான திசையில் போய் கார் மீது மோதிய நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு: வீடியோ


கோவம் கொண்ட காளையின் வீடியோவை இங்கே காணலாம்: 



கட்டப்பட்டதால் காளையால் ஓட முடியவில்லை. மறுபுறம், கம்பத்திலிருந்து அந்த நபராலும் இறங்க முடியவில்லை. இந்த நிலை நீண்ட நேரம் தொடர்ந்தது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி தற்போது எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோ kuttykalaivanan என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு கப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | தலைக்கு தில்ல பாத்தியா..சிங்கத்திடம் வீண் வம்பு செய்த குள்ள நரி: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ