பிக்பாஸ்- சீசன் II புகழ் ஐஸ்வர்யா தத்தா; மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் II நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில்., இப்போட்டியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது வீயோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 



பெரும் சர்சைகளுடன் நடைப்பெற்று வந்து இந்நிகழ்ச்சியில் நடந்த சச்சரவுகளுக்கு காரணம் ஐஸ்வர்யா தான் என ரசிகர்கள் இணையத்தில் அவரை வருத்தெடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் "உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால் நன்றி என்பது மிகவும் சின்ன வார்த்தை. பிக்பாஸ் வீட்டில் நான் மற்றவர்களை வருத்தப்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்தவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.



மேலும் விரைவில் தன்னை திரையில் பார்கலாம் எனவும், கடந்த 6 வருடங்களாக தமிழ்நாட்டில் நான் நிறைய கடினமான நாட்களை கடந்துள்ளேன். அப்போதெல்லாம் நான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இவ்வளவு ரசிகர்களை பெறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.