Viral Video: சமூக ஊடகங்களில் நாம் பல விதமான வீடியோக்களை காண்கிறோம். விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகின்றன. அதிலும் குரங்கு, பாம்பு, நாய், பூனை, சிங்கம், கரடி, யானை போன்ற விலங்குகளின் வீடியோக்கள் வேகமாக வைரல் ஆகின்றன. பாம்பின் வீடியோக்களுக்கு என இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு என்று கூறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகளைக் கண்டால் மக்கள் அச்சப்படுவது உண்மைதான். ஆனால் அவற்றின் மீது உள்ள ஆர்வமும் எப்பொழுதும் அதிகமாக இருக்கின்றது. ஆகையால் அவற்றின் வீடியோக்கள் மிக வேகமாக வைரல் ஆகிவிடுகின்றன. சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதைக் கண்டால் உடல் சிலிர்க்கிறது. 


ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் இது ஒருவரது வீட்டில் நிஜமாகவே நடந்துள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. 


வீடியோவின் துவக்கத்தில் சோபாவின் மீது வைக்கப்பட்டுள்ள தலையணையின் உரையை ஒருவர் விலக்கி அதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாம்பை வெளியே கொண்டு வர முயற்சிப்பதை காண முடிகின்றது. அந்த இடத்தில் பாம்பு இருப்பது அவர்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி தான் நம் அனைவருக்கும் எழுகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம்.


ஒரு வீட்டில் இருக்கும் நபர்கள் திடீரென்று சோபாவில் இருந்து ஏதோ வினோதமான சத்தம் வருவதை கேட்கிறார்கள். எங்கிருந்து சத்தம் வருகின்றது என்று அவர்கள் ஆராய துவங்கும் போது அச்சத்தின் உச்சத்திற்கு சென்று விடும்படி ஒரு காட்சியை காண்கிறார்கள். ஒரு பெரிய நாகப்பாம்பு சோபாவில் உள்ள தலையணையில் ஒளிந்து கொண்டிருப்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். நேரத்தை வீணாக்காமல் உடனடியாக அவர்கள் பாம்பு பிடிக்கும் நிபுணர்களை வரவழைக்கிறார்கள். அவர்கள் வந்து அந்த பாம்பை பிடிக்கும் காட்சியை கேமராவில் பதிவு செய்கிறார்கள். 


பாம்பு பிடிக்கும் நபர் ஒரு கருவியின் மூலம் தலையணையின் உரையை விலக்குகிறார். அதன் உள்ளே சுமார் 4 முதல் 5 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று சுருண்டிக்கொண்டு படுத்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. வீட்டில் நபர்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் குழு ஏற்படுத்தும் சத்தம் இந்த பாம்பிற்கு எரிச்சலை ஊட்டுகிறது. மேலும் தான் நிம்மதியாக படுத்து கொண்டிருந்த தலையணை உரையை பாம்பு பிடிக்கும் நபர் நீக்கியதால் அதற்கு கோபம் வந்தது. அது உள்ளிருந்து சீறிப் பாய்கிறது. இந்த காட்சி காண்பதற்கு மிக அதிர்ச்சியாகவும் அச்சரியமாகவும் உள்ளது.


தன்னால் இனி அந்த இடத்தில் மறைந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்த நாகப்பாம்பு வெளியே வருகிறது. ஆனால் அது அங்குள்ள நபர்களை அச்சப்படுத்த படம் எடுத்து ஆடுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது வீடியோவில் தெரியவில்லை. எனினும் பாம்பு பிடிக்கும் குழு அந்த பாம்பை பத்திரமாக பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட்டு இருப்பார்கள் என்று நம்புகிறோம்.


மேலும் படிக்க | அலாவுதீன் பூதமும் குரங்கும் டான்ஸ் ஆடினால் என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!


நடுவீட்டில் படம் எடுத்து ஆடிய பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் abhisheksandhu1126 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


'ஏய், இது ஒரு நாகப்பாம்பு. இது உலகின் மிக அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒம்றாக கருதப்படுகிறது' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'நான் இந்த ரீலைப் பார்க்கும் போது, ​​என் மடியில் ஒரு தலையணை இருந்தது' என ஒருவர் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். இப்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | Viral Video: ரயிலில் சாகசம் செய்த இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ