வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. விலங்குகளின் வீடியோக்களுக்கென சமூக ஊடகங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல ஆண்டுகளாக, தொழில்நுட்பம் உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது அன்றாட வாழ்வில் பெரிய மாற்றத்தை இது கொண்டு வந்துள்ளது. நாம் அனைவரும் நமது முதல் ஸ்மார்ட்போனை மிகவும் ஆர்வமாக, மகிழ்ச்சியுடன் வாங்கி இருப்போம். அந்த சின்ன கேட்ஜெட் செய்யும் அற்புதங்களை பார்த்து வியந்திருப்போம். மனிதர்கள் மட்டுமல்ல, குரங்குகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் மீது மோகம் இருக்கத்தான் செய்கிறது. தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ இதற்கு சாட்சியாக அமைகிறது. 


ஒரு குரங்கு குட்டி ஸ்மார்ட்போனை பார்த்தவுடன் அதற்கு தலை கால் புரியவில்லை. அதை அந்த நிமிடமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அதற்கு அதிகரிக்கிறது. ஸ்மார்ட்போனின் உரிமையாளரிடமிருந்து தொலைபேசியைப் பிடுங்க அது தொடர்ந்து முயற்சிக்கிறது. ஸ்மார்ட்போனை வைத்திருகும் நபர் அந்த குரங்கை தனது போனில் படம் பிடிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. இதற்கிடையில், தாய் குரங்கு தனது குட்டியை தடுக்க முயற்சித்து, அதனை பின்னால் இழுக்கிறது. இருப்பினும், குட்டி குரங்கு பிடிவாதமாக உள்ளது. ஸ்மார்ட்போனை எப்படியாவது பிடிங்கி விட வேண்டும் என மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறது. 


மேலும் படிக்க | வயித்த கலக்குதுனு ‘அங்க’ போனா கதியே கலங்கி போச்சு: டாய்லெடில் பாம்பு, வைரல் வீடியோ


இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்லார். "இளம் தலைமுறையினர் ஸ்மார்ட் போன்கள் மீது பைத்தியமாக உள்ளனர்” என்று தலைப்பில் எழுதியுள்ளார்.


குட்டி குரங்கின் லூட்டி வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாகி உள்ளது. மேலும் இணையவாசிகள் இதற்கு பல சிரிக்கும் எமோஜிகளை அளித்துள்ளனர். பல வித கமெண்டுகளையும் இந்த வீடியோவுக்கு அளித்துள்ளனர். சமூக ஊடகங்களுக்கும் ஸ்மார்ட்போன்களுக்கும் குரங்குகளும் அடிமை ஆகி விட்டன என எழுதியுள்ளனர். 


'அந்த குட்டி குரங்கால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை' என ஒருவர் எழுதியுள்ளார். 'அந்த தாய் குரங்கை பாருங்கள். அனைத்து தலைமுறைகளிலும்... மனிதர்களிலும்.. குரங்குகளிலும்.. அம்மா அம்மாதான்' என மற்றொருவர் கூறியுள்ளார். 


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. ஸ்மார்ட்போனை பிடுங்கும் அந்த குட்டி குரங்கின் வீடியோ நம்மை அறியாமல் நம்மை சிரிக்க வைக்கிறது என்றால் அது மிகையாகாது.


மேலும் படிக்க | கெத்து காட்டும் சிங்கத்தை துண்டைக் காணோம் துணையைக் காணோம் என விரட்டும் ராஜநாகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ