அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ

Animal Viral Video: அம்மா குரங்கின் பாசத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டும் ஒரு அற்புதமான வீடியொ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2022, 12:41 PM IST
  • வியக்க வைக்கும் தாய் குரங்கின் புத்திசாலித்தனம்.
  • பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்.
  • ஏகப்பட்ட லைக்குகளை அள்ளும் வைரல் வீடியோ.
அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் உருவானோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். தாய் என்பவளின் இயல்பு ஒரே மாதிரிதான் இருக்கும். அது மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்!! தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், தாயால் தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தையை காப்பாற்ற தனது புத்திசாலித்தனத்தை, தனது ஆற்றலை, தனது துணிவை என அனைத்தையும் பயன்படுத்தி விடுவார். 

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தால், கண்டிப்பாக தாய்மார்கள் சூப்பர் ஹீரோக்களாக மாறிவிடுவார்கள். எப்படியும் தங்கள் குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணமே தாய்மார்களுக்கு மேலோங்கி இருக்கும். 

குறிப்பாக தாய் குரங்குகள் தங்கள் குட்டிகளை பொத்தி பொத்தி வளர்க்கின்றன. குரங்கு குட்டிகள் சில காலம் வரை தங்கள் தாய்மார்களின் கைகளை விடுவதே இல்லை, அவற்றை விட்டு எங்கும் செல்வதும் இல்லை. ஒரு தாய் குரங்கின் புத்திசாலித்தனத்தை உறுதிபடுத்தும் ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. தனது குரங்கு குட்டியை காப்பதற்காக, அம்மா குரங்கு ஒரு புத்திசாலித்தனமான உத்தியை கடைபிடிப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த உத்தி பல மனிதர்களுக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

மேலும் படிக்க | ‘பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்’: கட்டித் தழுவி காதல் செய்யும் பாம்புகள், வைரல் வீடியோ 

குட்டிக் குரங்கு ஏதோ ஒரு உணவை சாப்பிட்டு அதனால் பிரச்சனை ஏற்படுகின்றது. உணவு வாயுக் குழாவில் அடைத்துக்கொண்டு குரங்கு மூச்சு விட சிரமப்படுகின்றது. குட்டியை காப்பாற்ற குரங்கு ஹெய்ம்லிச் செயல்முறையை பயன்படுத்துகிறது. இது ஒரு நபரின் சுவாசக் குழாயில் உள்ள அடைப்பை அகற்றுவதற்கான முதலுதவி முறையாகும். இந்த முறையில் தொப்புள் மற்றும் விலா எலும்புக்கு இடையில்  திடீரென ஒரு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் அடைத்த பொருள் வெளிவே வருகின்றது. 

வீடியோவில், குரங்கு அம்மா குட்டியின் வயிற்றில் அழுத்துவதைக் காண முடிகின்றது. இதனால் குட்டியின் சுவாசக் குழாயில் சிக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் பொருள் எளிதில் வெளியே வரும். குரங்கு குட்டியின் மூச்சுக்குழாயில் சிக்கிய உணவு அழுத்தம் காரணமாக வெளியே வருகிறது. இந்த வீடியோவை ஃபிகன் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது 2.9 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையு, 63k லைக்குகளையும் பெற்றுள்ளது.

குரங்கின் புத்திசாலித்தனம் மற்றும் அதன் துரித சிந்தனை மற்றும் செயல்பாடு அதன் குட்டியின் உயிரைக் காப்பாற்றியது என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இது இந்த வீடியோவை காணும் நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த உத்தி குரங்குக்கு தெரிந்திருப்பதும், அதை அது சரியான நேரத்தில் பயன்படுத்துவதும் வியக்க வைக்கிறது.

குழந்தையை காப்பாற்றிய தாய் குரங்கின் புத்திசாலித்தனத்தை இந்த வைரல் வீடியோவில் காணலாம்: 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News