வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் முகத்தில் புன்னகையை பூக்க வைக்கும் குழந்தைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் சில சமயம் குழந்தைகளின் அப்பாவித்தனமும், சில சமயம் அவர்களின் குறும்பும், சில சமயம் துடுக்குத்தனமும், சில சமயம் நம்மை வியக்க வைக்கும் பல நடவடிக்கைகளையும் நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட வீடியோக்கள் வெளிவந்த உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. 


குழந்தைகளின் பல செயல்கள் இணையவாசிகளின் இதயத்தை இளக வைக்கும் வகையில் இருப்பதுண்டு. தற்போதும் அப்படி ஒரு கியூட்டான வீடியோ வெளிவந்துள்ளது. இது வேகமாக வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் மீண்டும் இதை பார்த்து வருகிறார்கள். நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால், கண்டிப்பாக உங்கள் மனம் லேசாகும்.


பூச்சியுடன் பேசும் குழந்தை


இந்த வீடியோவில் ஒரு குழந்தை எங்கோ சென்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போது அதன் பார்வை ஒரு பூச்சியின் பக்கம் செல்கிறது. அந்த பூச்சியை பார்த்தவுடன் குழந்தை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. மிகவும் ஆசையுடன் குழந்தை பூச்சிக்கு ‘ஹாய்’ என சொல்கிறது. இப்படி ஒரு முறை அல்ல, பல முறை குழந்தை பூச்சியிடம், ‘ஹாய்..ஹெல்லோ’ என்று கூறுகிறது. தனக்கு பதிலளிக்கும் விதமாக பூச்சியும் தனக்கு ஹாய் சொல்லும் என குழந்தை நம்புவதை போல தெரிகிறது. 


மேலும் படிக்க | ஒரு சீட்டுக்கு இப்படியா..ஓடும் ரயிலில் களேபரம்..அதிர வைக்கும் வீடியோ


இந்த வீடியோவை முழுமையாக பார்த்த பிறகு, குழந்தையின் அப்பாவித்தனத்தை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சிறிய பூச்சிக்கு குழந்தை அளிக்கும் முக்கியத்துவமும், அதனுடன் நட்பு கொள்ள குழந்தை எடுக்கும் முயற்சியும் நம்மை வியக்க வைக்கிறது. 


குழந்தையின் செம கியூட் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Ruslan Yurchak என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதன் தலைப்பில் அவர் "நமஸ்தே! நமஸ்தே!" என்று எழுதியுள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


மேலும் படிக்க | ’டேய் சாப்பாடு போடுடா’ திருமண பந்தியில் சூரிக்கு டஃப் கொடுத்து சாப்பிட்ட நபரின் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ