வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், சில வீடியோக்கள் நம்மை அச்சத்திமன் உச்சிக்கு கொண்டு செல்கின்றன. தற்போதும் திகிலூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஒரு சாய்வு ஊஞ்சல் நாற்காலியில் படுத்துக்கொண்டிருக்கும் ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைக்கு அருகில் மிகப் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், அந்த பாம்பு மிக அருகில் வருவது அவர்களுக்கு தெரியாததால், அவர்கள் சலனம் இல்லாமல் இருக்கிறார்கள். 


தற்போது வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு பெண் தனது குழந்தையுடன் ஊஞ்சல் நாற்காலியில் அமர்ந்து இருப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்க்கும் நபர்களாலும், அந்த பாம்பு வருவதை அவ்வளவு சுலபமாக காண முடியவில்லை. கூர்ந்து கவனிக்கும்போதுதான் பாம்பு வருவது நமக்கு தெரிகிறது. 


மேலும் படிக்க | வெள்ளை புலி பாத்திருப்பீங்க... வெள்ளை சிங்கத்த பாத்திருக்கீங்களா? - வைரல் வீடியோ 


ஆனால், பாம்பு வருவது தெரியாமல், அந்த தாய் குழந்தையுடன் ஊஞ்சல் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். பின்னர், அவர் எழுந்து தன் குழந்தையின் அருகில் அமர்கிறார். அவர் எழ முயலும்போது, பாம்பு மிக அருகில் வந்துவிடுகிறது. அப்போதுதான் அவர் அதை கவனிக்கிறார். 


அதைக் கண்ட அடுத்த கணமே, தாய் சடாரென்று குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். "ஏதோ ஒன்று பதுங்கி இருக்கிறது," என்று வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. 


திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:


இந்த காணொளியை பார்த்த இணையமே பயந்து போனது. முதல் பார்வையில், தாய் மற்றும் குழந்தையை நோக்கி பாம்பு நகர்வதை யாராலும் கவனிக்க முடியவில்லை. இந்த வீடியோ Snake Videos என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டது. இது 22 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘நான் சுமார் 10 முறை இந்த இந்த வீடியோவை பார்த்தேன். என் கவனம் முழுதும் குழந்தை மீதே இருந்தது. பாம்பை நான் கவனிக்கவே இல்லை.” என ஒரு பயனர் எழுதியுள்ளார். 



மேலும் படிக்க | தெருவில் ஆடிய கோமாளிகளை தெறிக்கவிட்ட தெருநாய் வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ