இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை ‘பரியேறும் பெருமாள்’ உணர்த்தியது என திமுக தலைவர் MK ஸ்டாலின் பாராட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.  இயக்குனர் பா. ரஞ்சித் இந்த படத்தை தயாரித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்களின் பேராதரவோடு வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வருகின்றது. 


இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் இப்படத்தை குறித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றது. 


இப்படத்தினை அனைவரும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் மட்டும் அல்ல, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் படத்தினை பார்த்து பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... 



‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்!


என பாராட்டியுள்ளார். முன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இப்படத்தினை பார்த்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது!