Viral Video: சமூக ஊடகங்களில் தினமும் பலவித வீடியோக்கள் வெளிவருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் இணையவாசிகளிடையே அதிக ஆர்வம் ஏற்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் அச்சம் தான். பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. பாம்புகள் மிக ஆபத்தானவை என்பதால் அவற்றிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. பெரும்பாலான பாம்புகள் அவற்றை தீண்டாதவரை பிறரை எதுவும் செய்வதில்லை.


ஆனால் சிலர் பாம்புகளை சீண்டி அதற்கான விளைவையும் அனுபவிக்கிறார்கள். சமீபத்தில் பாம்பின் ஒரு வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் நமக்கு அச்சமும் ஆர்வமும் ஒன்றாக ஏற்படுகின்றது. இந்த வீடியோவில் ஒரு மனிதர் நாகப் பாம்பு ஒன்றுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டு, கொஞ்சிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த நபரை பார்த்தால் குடிபோதையில் இருப்பது போல தோன்றுகிறது. இந்த வீடியோ இணையவாசிகள் இடையே அதிர்ச்சி, கோவம், ஆர்வம், வியப்பு, சிரிப்பு என பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.


ஒரு நபர் மரத்தடியில் மது பாட்டிலுடன் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அவருக்கு முன்பாக நாகப் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுகிறது. அதைப் பார்த்து அங்கிருந்து ஓடிச்செல்லாமல் அந்தப் பாம்பை நோக்கி கையை நீட்டும் நபர் சாதாரண வீட்டு விலங்கை போல அதனுடன் பேசிக்கொண்டு பாசமாக தடவிக் கொடுக்கிறார்.


இதற்கிடையே கேமராவில் தெரியாத ஒரு நபரிடம், இந்தப் பாம்பு மிக நல்ல பாம்பு என்றும் அது தன்னை கடிக்காது என்றும், அதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார். நபரின் இந்த செயலைக் கண்டு அங்கு இருப்பவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது போலவே, அந்த பாம்பும் ஒன்றும் புரியாமல் அவரே பார்த்துக்கொண்டு இருக்கிறது. தான் வந்தவுடன் ஓடிச் செல்லாமல், தன்னுடன் பேசி, அன்பாக தடவிக்கொடுத்த அந்த நபரை பார்த்து பாம்பு ஆச்சரியப்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.


மேலும் படிக்க | ஆக்ரோஷமாக தாக்கும் முதலை... சிக்கித் தவிக்கும் மலைப்பாம்பு... நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ


இணையவாசிகளை மிரட்டிய அந்த வீடியோவை இங்கே காணலாம்:



 


எனினும் இப்படிப்பட்ட செயல்கள் ஆபத்தானவை. பாம்பு மட்டுமல்ல எந்த விலங்கையும் நம்ப முடியாது. விலங்கிற்கு தனக்கு ஆபத்து வரக்கூடும் என்ற என்ணம் வந்துவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் அங்குள்ள நபரை நிச்சயமாக தாக்கும். ஆகையால் ஆபத்தான விலங்குகளை நாம் தொந்தரவு செய்யாமல் இருப்பதும் அவற்றிடமிருந்து விலகி இருப்பதுமே நல்லது.


இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் a2z_venkat என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை சுமார் 16.8 மில்லியன் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்ட்களை அளித்து வருகிறார்கள். 


'இப்படிப்பட்ட ஒரு காட்சியை நான் இதுவரை கண்டதே இல்லை. அந்தப் பாம்பு ரப்பர் பாம்பு என்று அந்த நபர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா' என ஒரு பயனர் கூறியுள்ளார். 'அந்த நபர் ஒன்று மிக அதிக தைரியம் கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது மிக அதிக அளவில் குடித்திருக்க வேண்டும்' என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். 'அந்தப் பாம்பின் பொறுமை எப்பொழுது தீர்ந்து அது அந்த நபரை தாக்கமோ என்று அச்சமாக உள்ளது' என ஒருவர் எழுதியுள்ளார். 'இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும்' என்று ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | பெண்ணின் மீது ஏறிய குரங்கு செய்த குறும்பு: சிரிக்காம இருக்க முடியாது... வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ