வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'இஞ்சி தின்ன குரங்கு’, ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என இப்படி விலங்குகள் தொடர்பான பல சொற்றொடர்களை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இஞ்சி தின்ற குரங்கின் முகம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதே குரங்கு பாகற்காயை சுவைத்தால், அதன் முகம் எப்படி இருக்கும்? அது என்ன செய்யும்? இதை காட்டும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.


இந்த வீடியோவில், ஒரு குரங்கு பாகற்காயின் சுவையை ருசிப்பதைக் காண முடிகின்றது. அதை ருசித்த பிறகு, அதன் முகத்தில் தெரியும் ரியாக்‌ஷனும், பின்னர் அது எடுக்கும் ஓட்டமும் காண மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதை பார்த்தால் உங்களால் உங்கள் சிரிப்பை அடக்க முடியாது என்பது நிச்சயம். 


மேலும் படிக்க | எவன்டா அவன் காதை கடிக்கிறது.. வைரலாகும் பூனையின் ரியாக்சன்! 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், உணவைத் தேடிக்கொண்டிருக்கும் குரங்குகளுக்கு ஒருவர் பாகற்காய் கொடுப்பதைக் காண முடிகின்றது. இதைப் பார்க்கும்போது, ​​முதலில் பயனர்களின் மனம் குழம்புகிறது. அதே சமயம் குரங்கு சாப்பிடுமா என்ற கேள்வியும் மனதில் எழுகிறது. பின்னர் குரங்கு கசப்பான பாகற்காயை நோக்கி வேகமாக சென்று அதை ஒரு கடி கடிக்கிறது. அதன் பிறகு நடப்பதை பார்த்து இணையவாசிகளால் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை. 


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் gajanand_vaishnav_kedarnaath என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதில், ஒருவர் கையில் பாகற்காய் இருப்பதை முதலில் காண முடிகின்றது. அவர் அதை குரங்குகளுக்கு சாப்பிட கொடுக்கிறார். பாகற்காயைப் பார்த்த குரங்கு முதலில் அதைக் கடிக்கிறது. பிறகு பாகற்காயின் சுவை வாயில் தெரிந்த உடனேயே அதை அப்படியே விட்டுவிட்டு ஆளை விடுங்கள் என்று அங்கிருந்து ஓடியே விடுகிறது. 


குரங்கின் மாஸ் ரியாக்‌ஷனை இங்கே காணலாம்:



இதற்குப் பிறகு, மற்றொரு குரங்கு பாகற்காயை சுவைக்க வருகிறது. அந்த குரங்கு பாகற்காயை கடித்தவுடன் அதன் வாயில் பாகற்காயின் துவர்ப்புச் சுவை பரவுகிறது. இது அந்த குரங்கின் மனதைக் குழப்புகிறது. அதன் முக பாவனை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதன் குழப்பம் அதன் முகத்தில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகளால் இதை பார்த்து, குரங்குகளின் ரியாக்‌ஷன்களை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதற்கு பயனர்கள் பல வித கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | போன ஜென்மத்துல செல்லம் 'எலக்ட்ரீஷனா' இருந்திருக்குமோ? மின்வேலி தாண்டும் யானை வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ