Gurugram Viral Video : நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று பொதுவாக சொல்வதை விட பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது என கூற வேண்டும். குறிப்பாக, அவை அனைத்தும் பெண்கள் மேல் ஆண்கள் தொடுக்கும் வன்முறையை பொதுசமூகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில மாதங்களுக்கு முன் நடத்திய டெல்லி ஷ்ரத்தா சம்பவம் முதல் புத்தாண்டில், டெல்லி அருகே பல கி.மீ.,கள் காருக்கு அடியிலேயே இழுத்துச்செல்லப்பட்ட பெண் என்ற வரையில்,  அவர்கள் மீதான வன்முறை புதிது புதிதாக அவதாரம் எடுத்துக்கொண்டே வருகின்றன. 


அந்த வகையில், அதே தலைநகர் டெல்லி அருகே உள்ள குருகிராம் நகரில் ஆண் ஒருவர், பெண்ணை தாக்கும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அந்த சிசிடிவி வீடியோவில், பைக்கில் அமர்ந்திருக்கும் ஆண், ஒரு பெண்ணை ஹெல்மெட்டை கொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நபரின் தாக்குதலை அடுத்து, அந்த பெண்ணும் தற்காப்புக்காக தனது கையில் வைத்திருந்த பர்ஸை வைத்து திருப்பி அடித்ததும் வீடியோவில் பதிவாகியுளளது. 


மேலும் படிக்க | Viral Video : ஜிம்மில் மாரடைப்பு... சரிந்து விழுந்து உயிரை விட்ட உணவக உரிமையாளர்



இதுகுறித்து, குருகிராம் நகரின் உதவி காவல் ஆணையர் மனோஜ் கூறியதாவது,"கமல் என்ற இளைஞர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பெண் ஒருவர், அவருடன் பைக்கில் வர மறுத்ததால் ஹெல்மெட்டை கொண்டு அடித்துள்ளார். இதனால், அந்த பெண் மிகுந்த காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.  


வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகளில் பாதிக்கப்பட்ட அந்த பெண், ஆட்டோவில் இருந்து இறங்கியதும், சிறிது நேரம் அந்த ஆணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த நபர் ஹெல்மெட்டால் பெண்ணை அடிக்கத் தொடங்கினார். அந்தப் பெண்ணும் தனது பர்ஸைக்கொண்டு பதிலடி கொடுத்தார், மேலும், அப்பகுதியினர் சிலர் தாக்குதல் சம்பவத்தில் தலையிட முயற்சிப்பதையும் வீடியோவில் காண முடிந்தது.


சமீபத்தில், டெல்லி சுல்தான்புரியில் 20 வயது பெண் ஒருவர் தாக்கப்பட்டு, சுமார் 12 கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 


மேலும் படிக்க | குரூப்பை விட்டு தூக்கியதால் வாட்ஸ்அப் அட்மினின் நாக்கை அறுத்த கும்பல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ