ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் பல வித ஆச்சரியமான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. உத்தர பிரதேசத்தின் ஹர்தோய்யிலிருந்து கணவன்-மனைவி இடையே நடக்கும் கடுமையான சண்டையின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருவருக்கும் இடையில் நடு வீதியில், சலசலப்பு ஏற்பட்டு, அது சண்டை வரை செல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கணவன் முதலில் மனைவி மீது கையை ஓங்குகிறார். பின்னர் அந்த பெண்ணும் ஆத்திரமடைந்து தாயுடன் சேர்ந்து கணவனை நடுரோட்டில் அடித்து உதைக்கிறார். இவை அனைத்தும் வீடியோவில் தெரிகிறது.


கணவன் மனைவி இடையே சண்டை


உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் நகரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள நடுரோட்டில் கணவன்-மனைவியின் இடையே பயங்கர சண்டை ஒன்று அரங்கேறியுள்ளது. முன்னதாக, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் தனது தாயுடன் கணவர் மீது புகார் அளிக்க மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது கணவரும் அழைக்கப்பட்டார். 


கணவன்-மனைவி நேருக்கு நேர் வந்ததையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நடந்துள்ளது. கணவன் அந்த பெண்ணை அடித்ததையடுத்து, ஆத்திரமடைந்த பெண் தனது தாயுடன் சேர்ந்து கணவனை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் வழக்கில் தாய் மகள் மற்றும் பெண்ணின் கணவர் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ஹலோ நான் பாம்பு வந்திருக்கேன்: தூங்கும் நபரை எழுப்பும் பாம்பு, வைரல் வீடியோ


மண்டை உடையும் அளவு சண்டை போட்டுக்கொண்ட கணவன் மனைவியின் வீடியோவை இங்கே காணலாம்: