Viral Video OF School Girl Crying To Do Homework : குழந்தைகள் செய்யும் அனைத்துமே பல சமயங்களில் வேடிக்கையாவும், விளையாட்டாகவும் இருக்கும். பேச்சு வருவதற்கு முன்பு, இவற்றை சிரிக்க வைக்க முயற்சியே எடுக்க தேவையில்லை. எது செய்தாலும் கொக்கரக்கொட்டி சிரிக்கும். ஆனால், கொஞ்சம் வளர்ந்து பேசத்தெரிந்த பின்பு இவற்றை கையிலும் பிடிக்க முடியாது, பேசுவதை நிறுத்தவும் முடியாது. ஆனால், இந்த மழலை பேச்சிலும் செல்லமான பல விஷயங்கள் அடங்கியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ..


இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில், 7-8 வயது மதிக்கத்தக்க சிறுமி புலம்பிக்கொண்டே தனது நோட்டில் என்னவோ எழுதுகிறார். இதை பார்த்து வீடியோ எடுக்கும் நபர், “ஏன் முன்னாடியே இந்த ஹோம் வர்க் எல்லாம் செய்யவில்லை?” என்று கேட்க, அதற்கு அந்த குழந்தை அழுதுக்கொண்டே வீடியோ எடுக்கும் நபரை திட்டுகிறது. 



“அவ்ளோ ஹோம்வர்க் குடுத்துருக்காங்க...1,2,3,4,5,6,7,8,9,10ன்னு..இந்த கை என்ன ஆவுறது...” என்று அழுதுக்கொண்டே பேசுகிறது அந்த குழந்தை. அதற்கு வீடியோ எடுப்பவர், “கையெல்லாம் ஒன்னும் ஆகாது..நீ அந்தந்த டைமில் எல்லாத்தையும் எழுதியிருந்தா இப்போ சேர்த்து வெச்சு எழுத வேண்டாம்ல..இரு உன் மிஸ் கிட்ட சொல்லிவிட்றேன்” என்கிறார். அதற்கு அந்த குழந்தை, “டேய் நானே பார்க்க பாவமா இருக்கேன் டா உனக்கு தெரியாதா..கை வலில..”என்கிறது. இதற்கு வீடியோ எடுக்கும் நபர் உள்பட அனைவரும் சிரிக்கின்றனர். 


மேலும் படிக்க | பாம்புக்கு ஷாக்கடிச்சா எப்படியிருக்கும்? அது தெரியாம தான இந்த பயபுள்ள மின்கம்பியில தொங்குது! பீதி கிளப்பும் வீடியோ...


இந்த வீடியோ, தற்போது வரை 80 ஆயிரம் லைக்ஸ்களுக்கும் மேல் குவித்து இருக்கிறது. மேலும், நெட்டிசன்கள் பலர் அந்த குழந்தைக்கு ஆதரவு கொடுத்து கமெண்ட் அடித்து வருகின்றனர். 


இது குறித்து கமெண்ட் செக்‌ஷனில் பேசியிருக்கும் ஒரு நபர், “இப்ப ஏன் இவ்வளவு பேசுது குழந்தை பாவம் அவர்கள் அப்பா அம்மா இன்னும் போக போக என்னென்ன பேச போகுதுன்னு தெரியல அவங்களுக்கு இது விளையாட்டாக இருக்கு அவர்களுக்கு இன்று குழந்தைகளை நல்லது கெட்டது சொல்லி வளங்கள் மொபைல் ஃபோன்களை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள் நல்ல கருத்துக்களை சொல்லுங்கள் பிறகு எந்த குழந்தையும் எந்த அளவுக்கு பேசாது நம் பெற்றோர்களை பார்த்து தான் நம் குழந்தைகளும் வளர்கின்றன நாம் எப்படி இருக்கிறோம் நம் குழந்தைகளும் அப்படித்தான் இருக்கும் இது யாரையும் குறித்து சொல்லவில்லை என்னுடைய தனிப்பட்ட கருத்து இதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு ரிப்ளை செய்துள்ள சிலர், அவரை பூமரு என திட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க | முதியவர் மீது ஸ்பிரே அடித்த இளைஞர்! காலை உடைத்த போலீஸ்! வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ