பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு 568 கிலோ எடை கொண்ட லட்டு-வை வெட்டி கொண்டாடிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக்வி பிரதமர் மோடி பிறந்த நாளில் 568 கிலோ எடை கொண்ட லட்டுவை வெட்டினார்


பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68 வது பிறந்த தனத்தை வாரணாசியில் கொண்டாடினார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பாஜக ஆதரவாளர்கள் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.


இதை தொடர்ந்து நேற்று டெல்லியில் ஸ்வச்தா திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மோடியின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடினார்கள்.


கேக் வெட்டாமல் 568 கிலோ லட்டை வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். அந்த லட்டு-வில் ஹேப்பி பர்த்டே மோடி ஜி என்று எழுதப்பட்டிருந்தது. மோடி தனது பிறந்தநாளை தன்னுடைய தொகுதியான வாரணாசியில் கொண்டாடினார். வாரணாசிக்கு வந்த மோடியை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.



பள்ளிக் குழந்தைகளுடன் பேசிய அவர் கேள்வி கேட்க பயப்படவே கூடாது என்று அறிவுரை வழங்கினார். மோடி இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார்.