Cat Viral Video: வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஆனால், சில சூழல்களால் அவர்களால் வளர்க்க முடியாது. குடும்பச் சூழல், வீட்டில் யாருக்காவது நாய், பூனைகளின் இருக்கும் ஒவ்வாமை, அடிக்கடி வெளியூர் செல்லும் வேலைச் சூழல் ஆகியவற்றால் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் தயக்கம் காட்டுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஏதும் இல்லை என்றாலும், அதாவது நாயையோ, பூனையையோ வளர்க்கும் சூழல் இருந்தால் கூட, ஒருவேளை சில ஆண்டுகள் கழித்து அந்த செல்லப்பிராணி மரணித்துவிட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ, அது காயமடைந்துவிட்டாலோ அதனை தாங்கிக்க கொள்ளவே முடியாது என்னும் காரணத்திற்காகவும் சிலர் அவற்றை வளர்க்க மறுப்பார்கள். ஆசை ஆசையாக குடும்பத்தில் ஒருவராக வளரும் நாய், உயிரிழக்கும் போது அந்த குடும்பமே மீள முடியாத துயரை அடைவதை நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது கடந்திருப்பீர்கள்.


கதறும் சத்தம்...


எனவே, பூனையோ, நாயோ வளர்ப்பவர்கள் அதனை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். அதனை வளர்க்க இயலாதவர்கள் கூட அது துன்பமுறும்போது நிச்சயம் அதற்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அந்த வகையில், ஒரு வடிகால் குழாயில் பூனைக்குட்டி கதறும் சத்தத்தை ஒருவர் கேட்டுள்ளார். அதன் பிறகு அவர் விலங்கு மீட்புக் குழுவை அழைக்க, அவர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு பூனையின் உயிரை காப்பாற்றிய வீடியோ தற்போது, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.


வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:



மேலும் படிக்க | ஆசனத்தில பல வகை இருக்கலாம்! ஆனா இப்படி ஒரு கால் ஆசனத்தை யாரும் பார்த்ததுண்டா? வீடியோ


நீர் வடிகால் குழாயில் பூனை சிக்கியிருப்பதை அந்த வீடியோவில் நீங்கள் காணலாம். அங்கு ஒரு பூனை சிக்கியிருப்பதை மீட்க வந்தவர்கள் உணர்ந்தவுடன், அவர்கள் விரைவாக குழாயை வெட்டி பாதுகாப்பாக பூனை வெளியே எடுத்து, அதன் உயிரையே காப்பாற்றினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 


தாயுடன் இணைந்த பூனை


Jd's Animal Welfare Zone என்ற தன்னார்வ விலங்கு மீட்பு குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில்,"ஒரு வடிகால் குழாயின் வாயிற்பகுதியில், முதலில் பல நாட்கள் நீங்கள் சிக்கியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். விலங்குகளை உண்மையாகப் பராமரிக்கும் ஒரு வயதான மனிதர், அந்த விலங்கும் துன்புறும் சத்தத்தைக் கேட்டு எங்களுக்கு அழைத்தார். 


முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பின்னர் பூனைக்குட்டி மேலே நடந்து சென்று, பைப்பின் உள்ளே ஒளிந்துகொண்டு வெளியேறுவது எப்படி என்று தெரியாமல் மாட்டிக் கொண்டது தெரியவந்தது. அந்த பூனை இப்போது பத்திரமாக இருக்கிறது. சுத்தம் செய்யப்பட்டு, உணவளிக்கப்பட்டு, ஒரு நாள் வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பூனை ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்ட தன் தாயுடன் மீண்டும் இணையும்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த இடுகை செப்டம்பர் 7 அன்று பகிரப்பட்டது. இடுகையிடப்பட்டதிலிருந்து, இது 14 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. பகிர்வுக்கு பல விருப்பங்களும் கருத்துகளும் உள்ளன.


மேலும் படிக்க | Viral: RRRன் 'நாட்டு நாட்டு' பாட்டிற்கு நடனமாடிய WWE சூப்பர் ஸ்டார்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ