வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சிங்கம், புலி சிறுத்தை போன்ற விலங்குகள் மிகவும் ஆபத்தான விலங்குகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை நம்பி அவற்றின் அருகில் செல்ல முடியாது. அவை எப்போது தங்கள் கொடூர முகத்தை காட்டும் என்பதை கூற முடியாது. ஆகையால், மனிதர்களும் பிற விலங்குகளும் இவற்றிலிருந்து விலகி இருக்கவே நினைக்கிறார்கள். இவற்றின் கொடூரத்தை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.


சில சமயம் மிருகக்காட்சிசாலையில் கூண்டுக்குள் இருக்கும் மிருகங்களை மக்கள் நக்கலெடுத்து, கிண்டல் செய்து அவற்றை வெறுப்பேற்றுவதுண்டு. பல முறை இதற்கான உடனடி பதிலும் அவர்களுக்கு கிடைத்துவிடும். இப்படி சீண்டுபவர்களின் கைகளையோ கால்களையோ மிருகங்கள் பிடித்து சேதப்படுத்துவதுண்டு. ஆனால், இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு பிறகும் மக்கள் திருந்துவதில்லை. 


மேலும் படிக்க | நண்பனை காப்பாற்ற மலைப்பாம்புடன் நேருக்கு நேர் மோதிய கங்காரு: வீடியோ வைரல் 


கூண்டில் அடைக்கப்படிருக்கும் மிருகங்களால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தில் அவற்றை பலர் துன்புறுத்துகிறார்கள். அப்படி சீண்டி சிக்கிக்கொண்ட ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


சிங்கங்களிடம் சிக்கிய நபர் 


இந்த வீடியோவில் காணப்படும் நபர் விளையாட்டின் விபரீத எல்லைக்கே சென்றுவிட்டார் என்றே கூற வேண்டும். சிறிதும் யோசிக்காலம், கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கங்களுக்கு மத்தியில் அவரும் கூண்டில் நுழைகிறார். ஆனால் அங்கு பல சிங்கங்கள் அவரைத் தாக்குகின்றன. அவை அந்த நபரை காயப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து அவரைப் பிடிக்க முயற்சிக்கின்றன. சிங்கங்களின் இந்த செயல் அந்த நபரை மிகவும் பதட்டப்பட வைக்கிறது. அவரது பதட்டம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. பின்னர் வேறு சிலர் வந்து அவரை வெளியே அழைத்துச் சென்றதாக தெரிகிறது.


சிங்கத்திடம் சிக்கிய நபரின் வீடியோவை இங்கே காணலாம்: 



சிங்கங்களின் கூண்டுக்குள் நுழைந்த நபர் கதிகலங்கிப்போகிறார். அவர் முகத்தில் பீதியை கான முடிகின்றது. இதன் பின்னர் இப்படிப்பட்ட விஷப்பரிட்சையை அவர் செய்ய மாட்டார் என்றே தோன்றுகிறது. இந்த வீடியோ animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | பாம்பை உயிருடன் விழுங்கிய நபர், பாம்பு கொடுத்த ட்விஸ்ட்: சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ