வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. பாம்பு, குரங்கு, நாய், பூனை, யானை, என சில குரங்குகளுக்கு இணையத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். இந்த மிருகங்களின் வாழ்வில் அருகில் சென்று பார்க்க முடியாத பல வினோத விஷயங்களை நாம் இந்த வீடியோக்களின் மூலம் காண முடிகின்றது. 


குரங்கு வீடியோகளுக்கென சமூக ஊடகங்களில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில சமயம் இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவித்து நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. சில சமயம் மிக கியூட்டான விஷயங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 


தற்போது அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் அவதியில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் வனவிலங்குகளும் பெரிய வகையில் பிரச்சனையில் உள்ளன. தற்போது அதுபோன்ற உணர்வுபூர்வமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகி வரும் ஒரு வீடியோ -வில், வெள்ளத்தில் இருந்து தப்பிய இரண்டு குரங்கு குட்டிகள் தண்ணீரிலும் சேற்றிலும் மூழ்கியிருப்பது காணப்படுகிறது. அவை குளிரில் நடுங்கியபடி, ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டு உள்ளன. அவற்றுக்கு உதவி தேவை என்பது அவற்றின் முகபாவங்களின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. அப்போது ஒரு நபர் இந்த குரங்கு குட்டிகளின் பசியை போக்க வருகிறார். 


அந்த நபர் பால் பாக்கெட்டுகளையும் பால் பாட்டில்களையும் கொண்டு வந்துள்ளார். அவர் பாட்டிலில் பாலை விட்டு அதை முதலில் ஒரு குரங்கிடம் கொடுக்கிறார். அதற்குள் இரு குரங்குகளும் ஏக்கத்தோடு அந்த பால் பாக்கெட்டை பார்க்கும் விதம் நம் மனதை பிசைகிறது. ஒரு குரங்கு பாலை குடிக்க மற்றொரு குரங்கு தன் வாய்ப்புக்காக குளிரில் நடுங்கியபடி காத்திருப்பதை காண கண்களில் கண்ணீர் வருகிறது.


அடுத்து அந்த நபர் மற்றொரு பால் பாக்கெட்டை பாட்டிலில் ஊற்றி அடுத்த குரங்குக்கு கொடுக்க, அது சட்டென வாங்கி குடிக்கிறது. இந்த வீடியோ நம் இதயங்களை உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கிறது.


மேலும் படிக்க | பார்க்கிங்குக்கு இடம் இல்லனாலும் இப்படியா!! மரத்தில் பார்க் செய்யப்பட்ட கார், வைரல் வீடியோ


மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் charchatarhonar என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கி பல விலங்குகள் இறக்கின்றன. சஹ்யாத்ரி மற்றும் மலைத்தொடர்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இப்படிப்பட்ட குரங்குகளை அடிக்கடி பார்க்கிறோம். எனவே இதுபோன்ற விலங்குகளுக்கு கை கொடுக்க வேண்டியது மனிதர்களாகிய நமது கடமையாகும். இந்த மனிதாபிமானத்தை இன்று பலரிடம் காண்கிறோம், இது மகிழ்ச்சி அளிக்கின்றது.


மேலும் படிக்க | காலக் கொடுமைடா சாமி... பெரிய கருநாகத்தை நூடுல்ஸ் போல் சாப்பிடும் கொக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ