வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே காதல் அதிகம். நாய், குரங்கு, பூனை போன்ற விலங்குகளை மக்கள் செல்ல பிராணிகளாக வளர்க்க விரும்புகிறார்கள். இந்த விலங்குகள் தங்கள் உரிமையாளர் மீது மிகுந்த அன்பைப் பொழிகின்றன. அவர்களை பாதுகாக்க அதிகமான அக்கறை எடுத்துக்கொள்கின்றன. 


மேலும் படிக்க | திடீரென கூச்சலிட்ட மணமகள்: அப்படி என்னத்ததான் பார்த்தாங்க? வைரல் வீடியோ 


மனிதர்களும் இந்த விலங்குகள் மீது அதிக அளவு பாசத்தை காட்டுகிறார்கள். இருப்பினும், சில சமயங்களில் விலங்குகளும் மனிதர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதில் ஒரு சிறுவன் காட்டில் லங்கூர் குரங்குடன் சண்டையிடுவதைக் காண முடிகிறது. இருவரும் ஒருவரை இருவர் கடுமையாக தாக்கிக்கொள்கிறார்கள். 


லாங்கூருடன் சண்டையிடும் சிறுவன்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், காட்டில் சிறுவன் ஒருவன் முன்னால் அமர்ந்திருந்த லங்கூர் அருகே செல்வதையும், அப்போது லங்கூருக்கும் சிறுவனக்கும் இடையே சண்டை வருவதையும் காண முடிகின்றது. 


சிறுவன் லங்கூரை தூக்கி தூரமாக தள்ள முயற்சிக்கிறான், மறுபுறம், லங்கூரும் தொடர்ந்து தாக்குகிறது. இருவருக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடக்கிறது. இறுதியில் சிறுவன் வெற்றி பெறுகிறான். சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


லங்கூருக்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோவை இங்கே காணலாம்: