வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காரணமே இல்லாமல் கிண்டல் செய்தால் யாருக்கும் கோபம் வரும். நாயையோ, பூனையையோ, குரங்கையோ கிண்டல் செய்து, பின்னர் அவதிப்பட்ட பலரின் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். 


சீண்டலால் கோபம் கொண்ட குரங்கின் அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஒருவர் மீண்டும் மீண்டும் குரங்குகளை கிண்டல் செய்து கடுப்பேற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது. கடுப்பின் உச்சிக்கு சென்ற குரங்குகள் ஒன்றாக அந்த நபரைத் தாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அந்த மனிதனின் அதிர்ஷ்டம் என்னவென்றால் கண்ணாடிக்கு இந்தப் பக்கமும் குரங்கும் மறுபுறமும் அவரும் இருக்கிறார்கள். நடுவில் கண்ணாடி இருபதால்தான் அவரும் தைரியமாக குரங்குகளை கடுப்பேற்றினார் என்பது மற்றொரு விஷயம்.


மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 


கோபமடைந்த குரங்கு 


சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கண்ணாடி தடுப்பு வழியாக, ஒருவர் குரங்குகளை தொடர்ந்து கேலி செய்வதை காணமுடிகிறது. குரங்குகளும் வெகு நேரம் அமைதியாக இருக்கின்றன. அவர் ஒரு காகிதத்தை ஓட்டை மூலம் குரங்குகளை நோக்கி உள்ளே நுழைக்கிறார். குரங்கு அதை பிடிக்க வரும்போது பின்னுக்கு இழுத்து விடுகிறார். 


சிறிது நேரம் காகிதத்தை பிடிக்க முயற்சிக்கும் குரங்கு, பின்னர் கோபத்தின் எல்லையைத் தாண்டி, கடுப்பாகி அந்த நபர் மீது பாய முயற்சிக்கிறது. அங்கு இருக்கும் இரு குரங்குகளும் அவர் மீது பாய முயற்சிக்கின்றன. ஆனால் குரங்குகளுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கண்ணாடி சுவர் இருப்பது தெரியாது. 


இங்கு கண்ணாடி இல்லாவிட்டால், குரங்குகள் அந்த நபருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். கண்ணாடி இருந்ததால், அந்த நபர் தப்பினார். ஆனால், கண்ணாடி இல்லாமல் இருந்திருந்தால், அந்த நபர் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை குரங்குகளுடன் விளையாடி இருக்கமாட்டார். 


கடுப்பான குரங்குகளின் வீடியோவை இங்கே காணலாம்: